உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

பண்ருட்டி மார்க்கெட் கமிட்டியில் நெல்வரத்து அதிகரிப்பு

பண்ருட்டி: 

                 பண்ருட்டி மார்க்கெட் கமிட்டியில் நேற்று முதல் நெல் வரத்து அதிகரித்தது. பண்ருட்டி மார்க்கெட் கமிட்டியில் நேற்று கருப்பு எள் 25 மூட்டையும், நெல் 400 மூட்டைகளும், உளுந்து 20 மூட்டையும், ராகி 15 மூட்டையும் மற்றும் பச்சைபயிர், கம்பு, பருத்தி தலா ஒரு மூட்டையும் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர். நெல் வரத்து கடந்த வாரம் 100 மூட்டை அளவிலே இருந்தது. தற்போது நவரை பருவ அறுவடை துவங்கியதால் நேற்று மார்க்கெட் கமிட்டிக்கு 400 நெல் மூட்டைகள் வரத்து அதிகரித்தது. 80 கிலோ எடை கொண்ட கருப்பு எள் 2,959ம், பருத்தி குவிண்டால் 2,959ம், நெல் குண்டுமணி 75 கிலோ 727ம், உளுந்து 100 கிலோ 5,469ம், கம்பு 100 கிலோ 1,009ம், ராகி 1,139ம், பச்சை பயிர் 5,859 ரூபாய்க்கும் விற்பனையானது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior