உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவதால் பெற்றோர்கள் கலக்கம்

பரங்கிப்பேட்டை: 

                   பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளதால் பெற் றோர்கள் கலக்கமடைந்துள்ளனர். பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 102 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 57 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 56 சதவீதம் ஆகும். பள்ளி அளவில் சதீஷ்குமார் 1004, மற்றொரு சதீஷ்குமார் 1000, சிலம்பரசன் 987 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 2 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளதால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலக்கம் அடைந் துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior