உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்க துவங்கினர்

கடலூர்: 

                பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெறுவதற்கும் மற்றும் மறு கூட்டலுக்கும் நேற்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கத் துவங்கினர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த மூன்று நாட்களுக்குள் விடைத்தாள் நகல் களை பெறுவதற்கும், மறு கூட்டலுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். 15 மற்றும் 16ம் தேதி விடுமுறை தினம் என்பதால் நேற்று 17ம் தேதி முதல் மாணவ, மாணவிகள் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்ய துவங்கினர். விடைத்தாள் நகல் பெறுவதற்கு ஒவ்வொறு பாடத்திற்கும் 275 ரூபாயும், தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடங்களுக்கு தலா 550 ரூபாயும், மறுகூட்டலுக்கு 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் விடைத்தாள் நகல் பெற்ற அடுத்த ஐந்து நாட்களுக்குள் மாணவர்கள் மறு திருத்தலுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு ஒரு பாடத்திற்கு 1,005 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior