உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு டி.வி. எஸ்., நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

கடலூர்: 

        ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

                     சென்னை, ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள டி.வி. எஸ்., நிறுவனத்திற்கு 4,000 வாகன ஓட்டுனர்கள் தேவைப்படுவதால் மேற்படி இடத்தில் சென்று வேலை செய்வதற்கு விருப்பமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி 10ம் வகுப்பு தோல்வி மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள். ஐ.டி.ஐ., மற்றும் வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றவராக இருத்தல் வேண்டும். வயது வரம்பு 19 முதல் 30 வரையிலும், மருத்துவ தகுதி பெறுதல் வேண்டும். தகுதியுள்ளவர்களுக்கு இரண்டு மாத பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது உணவு, உறைவிடம் வசதியும், பயிற்சி முடிந்தவுடன் வேலை வாய்ப்பும் தரப்படும். வேலையின் போது சீருடை மற்றும் காலணி இலவசமாக வழங்கப்படும். வெள்ளைத் தாளில் விண்ணப்பம் எழுதி, வாக்காளர் அடையாள அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், பள்ளி சான்று நகல், ஆகியவற்றினை இணைத்து 

மாவட்ட மேலாளர், 
தாட்கோ, சுப்பராயலு நகர், 
கடலூர் 

                 என்ற முகவரிக்கு 31.5.2010 மாலை 4 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். இவ்வாறு கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior