உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

விருத்தாசலம் மங்கலம்பேட்டை அருகே இரண்டு வீடுகளில் 48 சவரன் நகை திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை

விருத்தாசலம் : 

                மங்கலம்பேட்டை அருகே, ஒரே இரவில் இரண்டு வீடுகளில் புகுந்து 48 சவரன் நகை மற்றும் 6.5 லட்ச ரூபாய் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

                கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அடுத்த பிஞ்சனூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (48). மக்கள் நல பணியாளர். நேற்று முன்தினம் இரவு செல்வராஜ் தனது வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது மனைவி செல்வம் வீட்டின் முன்பக்க வராண்டாவில் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை நான்கு மணிக்கு சத்தம் கேட்டு எழுந்த செல்வராஜ் வீட்டிற்குள் சென்று பார்த்தார். பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த 32 சவரன் நகை மற்றும் 5 லட்சம் ரொக்கம் திருட்டு போயிருந்தது.

மற்றொரு சம்பவம்

                செல்வராஜ் வீட்டின் பக்கத்து வீட்டில் பூமாலை (45), அவரது மனைவி மணிமேகலை மற்றும் குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு தாழ்பாள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ந்தார். அறையில் பீரோவில் இருந்த 16 சவரன் நகை 1.57 லட்ச ரூபாய் பணம் திருட்டு போனது தெரிந்தது. தகவல் அறிந்த டி.எஸ்.பி., ராஜசேகரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே இரவில், பக்கத்து பக்கத்து வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior