உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

நரிக்குறவர்கள் மோதல் : துப்பாக்கி சூடு: வாலிபர் கைது


விருத்தாசலம் : 

              இரு சக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்ட நரிக்குறவர் சங்க தலைவரை, நாட்டு துப்பாக்கியால் சுட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

               விருத்தாசலம் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் பாண்டியன் (45). நரிக்குறவர் சங்கத் தலைவர். அதே காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது இளைய மகன் பாஷா (13). இவர் நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றார். இதனை பார்த்த பாண்டியன், பாஷாவை கண்டித்தார். இதுபற்றி பாஷா தனது அண்ணன் வடிவேலுவிடம் (23) கூறினார். உடன் வடிவேல் எப்படி என் தம்பியை திட்டலாம் என பாண்டியனிடம் தகராறு செய்தார்.

                  இதில் ஆத்திரமடைந்த பாண்டியன், வடிவேலுவின் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தினார். கோபமடைந்த வடிவேல் வேட்டைக்கு செல்ல, லோடு செய்து தயாராக வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து பாண்டியனை சுட்டார். இதில் பாண்டியனின் கழுத்து, கன்னம் உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. துப்பாக்கியால் சுடுவதை தடுக்க முயன்ற, விஜய் என்பவரின் மனைவி கொளஞ்சிக்கும் காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த இருவரும், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, வழக்குப் பதிந்து விருத்தாசலம் போலீசார் வடிவேலுவை கைது செய்து, அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior