உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் துறைக்கு நிதியுதவி

சிதம்பரம்: 

                  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் பொருளாதார துறையின் பணிகளை பாராட்டி அமெரிக்க நாட்டின் மிக்சிக்கன் மாநில பல்லைக்கழக மாணவர்கள் 1,150 டாலர் நிதியுதவி வழங்கினர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் பொருளாதார துறையின் பணிகளை பாராட்டி அமெரிக்க நாட்டின் மிக்சிக்கன் மாநில பல்லைக்கழக மாணவர்கள் 1,150 அமெரிக்க டாலர்கள் நிதியுதவி செய்ய முன் வந்தனர். இந்த நிதியின் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட 600 மீனவ பெண்களுக்கு தொழில் முனைவோர் வேலைவாய்ப்பு திறன் மேம்பாடு பயிற்சித் திட் டம் துவக்கி ஓர் ஆண்டு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று பல்கலைக் கழகத்தில் நடந்தது. பொருளாதார துறை தலைவர் சுந்தரவரதராஜன் தலைமை தாங்கினார். வேளாண் கல்லூரி முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். அமெரிக்க நாட்டின் மிக் சிக்கன் மாநில பல்லைக்கழக மாணவர்கள் நிதியை துணைவேந்தர் ராமநாதனிடம் வழங்கினர். இணை பேராசிரியர் ராமநாதன், துணை பேராசிரியர் சீனுவாசன் உள்ளிட் டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior