உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

விருத்தாசலத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

விருத்தாசலம்: 

                மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விருத்தாசலம் ஜி.என்., திருமண மண்டபத்தில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன், ஆர்.டி.ஓ., முருகேசன் முன்னிலை வகித் தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பன்னீர் செல்வம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை, திருநங்கைகளுக்கு இலவச மனைப் பட்டா, அங்கன்வாடி மையங்களுக்கு எரிவாயு அடுப்புகள் என 1 கோடியே 57 லட்சம் ரூபாய்க்கான நலதிட்ட உதவிகளை வழங்கி பேசினார். விழாவில், மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் மிருளாளினி, மருத்துவ இணை இயக்குனர் ஜெயவீரகுமார், தாசில்தார் ஜெயராமன், மாவட்ட துணை சேர்மன் பிரான்சிஸ் மேரி, ஒன்றிய சேர்மன் செல்வராசு, நகர சேர்மன் முருகன், முன்னாள் எம்.பி., கணேசன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் அன்பழகி, சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட திட்ட மேலாளர் நித்தியானந்தம், மாற்று திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior