உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

கீரப்பாளையத்தில் புதிய மின் மாற்றி

கீரப் பாளையம்: 

                 சிதம்பரம் அருகே கீரப்பாளையம் துணை மின் நிலையத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய மின் மாற்றி துவங்கப்பட்டது. கீரப்பாளையம் ஊராட்சியில் 33/11 கே.வி. வழித் துணை மின் நிலையத்தில் இருந்த திறன் மின் மாற்றியின் திறனை 3 எம்.வி.ஏ.,வில் இருந்து 5 எம்.வி.ஏ., ஆக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம் மண்டல தலைமை பொறியாளர் சண்முகம் வழிகாட்டுதலுடன் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய மின் மாற்றி அமைக்கப் பட்டது. துவக்க விழாவில் சிதம்பரம் கோட்ட செயற் பொறியாளர் செல்வசேகர் தலைமை தாங்கினார். கடலூர் எம்.ஆர்.டி. செயற் பொறியாளர் சம் பத்மகஜான் முன்னிலை வகித் தார். கடலூர் மின் பகிர் மான வட்ட மேற்பார் வையாளர் ரவிராம் புதிய மின் மாற்றியை இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் குமார், வாசுதேவன், பாலாஜி, மகேந்திரன், உதவி பொறியாளர்கள் ராஜேந்திரன், சாமிதுரை, குமார், சித்தானந்தன், சீனிவாசன், மோகன் காந்தி பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior