உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

திருவந்திபுரம் அரசு பள்ளி பிளஸ் 2வில் 80 சதவீதம் தேர்ச்சி

கடலூர்: 

                  திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொது தேர்வில் 80 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். கடலூர் அடுத்த திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 82 மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வு எழுதினர். அதில் 65 பேர் தேர்ச்சியடைந்தனர். இதன் மூலம் பள்ளியின் தேர்ச்சி 80 சதவீதம் பெற்றது. இது கடந் தாண்டைவிட 29 சதவீதம் அதிகம். மாணவர் கபில்தேவ் 940 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், தேர்ச்சி சதவீதம் உயர காரணமான தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பெற் றோர் ஆசிரியர் கழக தலைவர் சேஷாத்திரி பாராட்டினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior