உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு


 
            வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம்,​​ புதுவையில் செவ்வாய்க்கிழமை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது:

                ங்கக் கடலில் சென்னையிலிருந்து 850 கி.மீ.​ தொலைவில் தென்கிழக்குப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி,​​ புயலாக உருவெடுத்துள்ளது.​ இந்தப் புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து,​​ ஆந்திர மாநில கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது.​ இதனால் ஆந்திரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் பாதிப்பு தமிழகத்திலும் இருக்கும்.​ பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது.​ தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.​ சென்னையிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார். இந்தத் தொலைதூர புயல் சின்னம் காரணமாக,​​ பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.​ மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

ஆந்திரத்தில் உஷார் நிலை:​​ 

               புயல் சின்னம் காரணமாக,​​ ஆந்திரத்தின் 9 கடலோர மாவட்டங்களிலும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.​ தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களை,​​ ஆந்திர அரசு கேட்டுக்கொண்டுள்ளது

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior