உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

கலை,​​ அறிவியல் கல்லூரிகளில் சேர ​மாணவர்கள் ஆர்வம்


மறுகூட்டல் மற்றும் விடைத்தாள்களின் நகலைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை வாங்க திங்கள்கிழமை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் நீண்ட வரிசையில் நிற்கும் மாணவர்கள்.
 

             கலை,​​ அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.​ ​​ இதற்குச் சான்றாக சென்னையில் உள்ள அரசு கலை,​​ அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்களைப் பெற ஏராளமான மாணவர்கள் திங்கள்கிழமை வரிசையில் காத்திருந்தனர்.​ ​​ 

                   பிளஸ் 2 தேர்வில் ஆண்டுதோறும் தேர்ச்சி பெறும் மாணவர்களில்,​​ பொறியியல் படிப்பில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோரும்,​​ மருத்துவம்,​​ பல் மருத்துவம்,​​ கால்நடை மருத்துவ அறிவியல்,​​ வேளாண்மை,​​ சட்டம் போன்ற தொழில் படிப்புகளில் சில ஆயிரம் மாணவர்களும் சேருகின்றனர்.​ ஆனால்,​​ கலை,​​ அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கைதான் மிகவும் அதிகம்.​ ​​ தமிழகம் முழுவதும் 2009-10-ம் ஆண்டு கணக்குப்படி,​​ 62 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 46,386 இடங்கள்,​​ 133 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 97,652 இடங்கள்,​​ 383 சுயநிதி கல்லூரிகளில் 1,08,637 இடங்கள்,​​ 9 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 3,563 இடங்கள் என 578 கல்லூரிகளில் 2,56,238 இடங்கள் உள்ளன.​ இவற்றில் 2,17,329 இடங்கள் நிரப்பப்பட்டன.​ 2010-11-ம் ஆண்டிலும் அதே அளவு இடங்கள் கிடைப்பதோடு,​​ பல கல்லூரிகளில் 10 சதவீதம் வரை கூடுதல் இடங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.​ ​​ இந்த ஆண்டு இவற்றில் அதிக அளவில் மாணவர் சேர்க்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.​ ​​ ​ 

                   பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த வெள்ளிக்கிழமை ​(மே 14) வெளியானது.​ பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ​முக்கியமான கணிதம்,​​ இயற்பியல் போன்ற பாடங்களின் மதிப்பெண்ணும் வெகுவாக குறைந்துள்ளது.​ இதனால்,​​ பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண் குறைந்துள்ளது.​ இதனால் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பொறியியல் கல்லூரி அல்லது பொறியியல் பாடப் பிரிவுகளில் சேர வாய்ப்பு இல்லாமல் போகும் என கருதப்படுகிறது.​ மாணவர்கள்,​​ கலை,​​ அறிவியல் கல்லூரிகளின் பக்கம் படையெடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.​ ​​

                  கலை கல்லூரிகளில் கடந்த ஆண்டில் 38,909 இடங்கள் மட்டுமே காலியாக இருந்தன.​ இவற்றில் கலை,​​ அறிவியல் படிப்புகளில் சேர்ந்த பின்னர்,​​ பொறியியல் படிப்பு கிடைத்து அதில் சேர்ந்ததால் ஏற்பட்ட காலி இடங்களும் அடங்கும்.​ கணித பாட மதிப்பெண் குறைவு காரணமாக இந்த ஆண்டு அவ்வாறு காலியிடங்கள் ஏற்படுவதும் குறையும் என்று கூறப்படுகிறது.​ ​​ தவிர,​​ பிளஸ் 2 தேர்வில் வேதியியல்,​​ வணிகவியல்,​​ கணக்குப் பதிவியல்,​​ வணிகக் கணிதம் போன்ற பாடங்களில் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளதோடு,​​ கணிசமான மதிப்பெண்ணையும் பெற்றுள்ளனர்.​ ​​ கல்வித்துறை வரலாற்றில் என்றுமே இல்லாத அளவுக்கு வணிகவியலில் இந்த ஆண்டு 968 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.​ இதே கடந்த ஆண்டில் 285 மாணவர்கள் தான் வணிகவியலில் 100 சதவீத மதிப்பெண்ணைப் பெற்றுள்ளனர்.​ வணிகக் கணிதத்தில் 341 மாணவர்களும் ​(கடந்த ஆண்டில் 198 பேர்)​ ,​​ கணக்குப் பதிவியலில் 851 பேரும் ​(கடந்த ஆண்டில் 621 பேர்)​ 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.​ ​​ 

                 இதனாலும்,​​ கலை,​​ அறிவியல் கல்லூரிகளில் வழக்கமாக சேரும் மாணவர்களைவிட 2010-11-ம் ஆண்டில் மாணவர் சேர்க்கை அதிகம் இருக்கும் நிலை உருவாகியுள்ளது.​ ​​ மாணவர் சேர்க்கைக்காக அரசு கல்லூரிகளில் கடந்த வாரம் இறுதியில் விண்ணப்ப விற்பனை தொடங்கியது.​ சென்னை மாநிலக் கல்லூரியில் இதுவரை 4,000 விண்ணப்பங்களும்,​​ ராணி மேரி கல்லூரியில் 4,400 விண்ணப்பங்களும்,​​ நந்தனம் கல்லூரியில் 1,000 விண்ணப்பங்களும் விற்பனையாகியுள்ளன.​ ​​ விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு,​​ அவை சமர்ப்பிக்கப்படும் கால அளவை அந்தந்தக் கல்லூரிகள் நிர்ணயித்துள்ளன.​ எனினும் பெரும்பாலான கல்லூரிகளில் மே 31 வரையிலும்,​​ வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி போன்ற சில கல்லூரிகளில் ஜூன் முதல் வாரம் வரையிலும் விண்ணப்ப விநியோகம் இருக்கும்.​ ​​ சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் கலியபெருமாள்,​​ ​ விண்ணப்ப விற்பனை கடந்த ஆண்டைவிட அதிகம் இருக்கும்.​ எனினும் தேவைக்கேற்ப விண்ணப்பங்கள் ​அச்சடிக்கப்பட்டுள்ளன.​ தேவைப்பட்டால் மீண்டும் அச்சடிக்கப்படும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior