உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் 'மெகா' சைஸ் பள்ளம்

திட்டக்குடி: 

              திட்டக்குடி அருகே மரத்தின் நிழலில் மறைந்துள்ள 'மெகா' சைஸ் பள்ளத்தில் சிக்கி இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

               விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலை வழியே புதுச்சேரி, கேரளா மாநிலங்களுக்கும், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் மாவட் டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தவிர பெண்ணாடம் சர்க்கரை, சிமென்ட் ஆலைகளுக்கு மூலப்பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களும், பள்ளி, கல் லூரி வாகனங்களும் செல்கின்றன. இவ்வழியாக விருத்தாசலம், பெண்ணாடம், ராமநத்தம், பெரம்பலூர் என குறிப் பிட்ட பகுதிகளுக்கு இரு சக்கர வாகன ஓட்டிகள் நேர விரயம் கருதி செல்கின்றனர்.

                   இந்நிலையில் விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ் சாலை குண்டும், குழியுமாக ஆங் காங்கே பெயர்ந்து வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்கும் அபாயத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திட்டக்குடி முதல் விருத்தாசலம் வரை சாலை முற்றிலுமாக போக்குவரத் திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஆவினங்குடி அரசு மணல் குவாரி அருகில் நெடுஞ்சாலையில் மெகா சைஸ் பள்ளம் உள்ளது. அந்த இடத்தில் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இரவில் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது. ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பள்ளங்களை பேட்ஜ் ஒர்க் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior