உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு: மூன்று பேர் கைது: வேன் பறிமுதல்

சிறுபாக்கம்: 

                       சிறுபாக்கம் அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்து தப்பியோடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அடுத்த குமராட்சி தெம்மூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை மகன் தமிழ்ச்செல்வன் (25). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு டி.என்.28 ஏ.7599 எண் கொண்ட லாரியில் சவுக்கு லோடு ஏற்றிக் கொண்டு குள்ளஞ்சாவடியிலிருந்து ஈரோடு சென்றார். வேப்பூர் அடுத்த ரெட்டாக்குறிச்சி கைகாட்டி அருகே சென்றபோது, பின்னால் வந்த டி.என்.32 ஆர்.3611 பதிவெண் கொண்ட மகிந்திரா வேன் திடீரென லாரியின் முன்புறம் வேகமாக சென்று குறுக்கே நின்றது. வேனிலிருந்து இறங்கிய வேப்பூர் அடுத்த நரையூர் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் மாதேஸ்வரன் (30). அவரது ஆதரவாளர்கள் தண்டபாணி, கோவிந்தசாமி ஆகியோர் லாரி டிரைவர் தமிழ்ச் செல்வனை தாக்கி அவர் வைத்திருந்த 1,300 ரூபாயை பறித்து தப்பியோடினர். இது குறித்து தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் சிறுபாக்கம் சப் இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், அரிகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிந்து லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்து சென்ற மாதேஸ்வரன், தண்டபாணி, கோவிந்தசாமி ஆகிய மூவரையும் நயினார் பாளையம் அருகே பிடித்து கைது செய்து அவர்கள் பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior