உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

மொபட்-பைக் மோதல்: ஒருவர் பலி

பண்ருட்டி : 

                 பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிக்கொண்டதில் ஒருவர் இறந்தார்.
 
                   பண்ருட்டி அடுத்த கீழிருப்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளையன்(35). இவர் இந்திரா நகரில் இருந்து பத்திரக்கோட்டைக்கு மொபட்டில் சென்றுக் கொண்டிருந்தார். வேகாக்கொல்லை அருகே சென்றபோது எதிரே பெலாந்தோப்பை சேர்ந்த பாலமுருகன்(28) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. அதில் படுகாயமடைந்த இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு வெள்ளையன் இறந்தார். பாலமுருகன் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior