உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வு பணிக்கு மேல்நிலை ஆசிரியர்களை நியமிக்க கூடாது

விருத்தாசலம் : 

                எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வு பணிக்கு மேல்நிலை கல்வியில் பணியாற்றும் ஆசிரியர் களை  நியமிக்க கூடாது என பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
                   தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது.  மாவட்ட தலைவர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் கந்தகிரிவாசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் வீரராகவன் கூட்டம் குறித்து பேசினார். கூட்டத்தில் வரும் எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வில் மேல்நிலை கல்வியில் பணியாற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் உட்பட எவரையும் தேர்வு பணிக்கு நியமனம் செய்யகூடாது என சி.இ.ஓ., வை கேட்டுகொள்வது, எஸ்.எஸ்.ஏ., பணியிடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுகுழு உறுப்பினர் அழகுசெல்வம், தேவநாதன், ராஜேந்திரன், உதயசூரியன், கனகராஜ், ராமலிங்கம், குமார், கார்த்தீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior