உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

மணிபர்ஸ் திருடிய பெண் கைது


திட்டக்குடி : 

               பஸ்சில் பெண்ணிடம் "மணிபர்ஸ்' திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
 
                பெண்ணாடம் அடுத்த சின்னகொசப்பள்ளத்தை சேர்ந்தவர் வேலாயுதம் மனைவி மஞ்சுளா (35). இவர் நேற்று காலை 9 மணியளவில் விருத்தாசலத்திலிருந்து பெண்ணாடத்திற்கு அரசு டவுன் பஸ்சில் வந்து இறங்கினார்.  அப்போது பின்னால் வந்த இளம்பெண் ஒருவர், மஞ்சுளா கொண்டு வந்த பையிலிருந்து மணி பர்சை எடுத் தார். இதனைக் கண்டு திடுக்கிட்ட மஞ்சுளா கூச்சலிடவே, சக பயணிகள் அந்த இளம் பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ஈரோடு ஆனந்த் மனைவி சவுந்தர்யா (21) என்பதும், தற் போது திருச்சி மணப்பாறை ராயமேலூர் கிராமத்தில் வசித்து வருவதும் தெரிந்தது. இது குறித்து பெண்ணாடம் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்கு பதிந்து இளம் பெண் சவுந் தர்யாவை கைது செய்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior