உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

அனுமதி பெறாத டிஜிட்டல் பேனர்களுக்கு பாதுகாப்பு தர முடியாது: டி.எஸ்.பி.,

நெய்வேலி : 

                 அனுமதி பெறாமல் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என நெய்வேலி டி.எஸ்.பி., தெரிவித்துள்ளார்.
 
               நெய்வேலி போலீஸ் சரகத்திற்குட் பட்ட பகுதிகளில் டிஜிட்டல் பேனர் களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நேற்று டி.எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய டி.எஸ்.பி, மணி பேசுகையில், இனி வரும் காலங்களில் டிஜிட்டல் பேனர் வைக்க விரும்புபவர்கள் போலீஸ் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு முன் மூன்று நாளும், நிகழ்ச்சிக்கு பின் 2 நாட்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும். அனுமதி பெற்று வைக்கப்படும் பேனர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படும்.  நிகழ்ச்சி முடிந்த 2 நாளில் பேனர் அகற்றாமல், சேதமடைந்தால் போலீஸ் பொறுப்பேற்காது. பேனர்களை போக்குவரத்திற்கு இடையூறாக இல்லாமலும், கடைகளுக்கு பாதிப்பு இல்லாதவாறு வைக்க வேண் டும். தலைவர்களின் சிலைகளை மறைத்து வைக்கக் கூடாது. சினிமாக்கள் ரீலிசாகும் போது ரசிகர்கள் வைக்கும் பேனர்களுக்கும் இந்த ஐந்து நாள் விதிமுறை பொருந்தும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior