உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

ஆக்கனூர் ஊராட்சியில் என்.எஸ்.எஸ்., முகாம்

ராமநத்தம் : 

             ராமநத்தம் அடுத்த ஆக்கனூர் ஊராட்சியில் தொழுதூர் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்களின் ஏழு நாள் சிறப்பு முகாம் துவங்கியது.
 
            கல்லூரி தாளாளர் கிருஷ்ணசுவாமி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் இந்திராகாந்தி, துணைத்தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தனர். என்.எஸ். எஸ்., செயல் அலுவலர் கொளஞ்சிநாதன் வரவேற்றார். டி.எஸ்.பி., இளங்கோ முகாமை துவக்கி வைத்தார். என்.எஸ்.எஸ்., உறுப்பினர் தினேஷ் அறிக்கை வாசித்தார். கல்லூரி நிர்வாக இயக்குனர்கள் ராஜபிரதாபன், ராஜன், முதல்வர் ரெங்கநாதன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வைத்திலிங்கம், உதவி தலைமை ஆசிரியர் நாகராஜன், வள்ளலார் அறக்கட்டளை நிறுவனர் பொன்மொழியார், மண்டல உடற்கல்வி ஆய்வாளர் சாமிதுரை வாழ்த்தி பேசினர். விழாவில் ஆசிரியர்கள் வெங்கடாசலம், வீரமணி, வேலாம்பாள், நூலகர் பிரகாசம் உட்பட மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முகாமில் ஆக்கனூர் செல்லியம்மன் கோவிலில் உழவாரப்பணி, தெருக்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. புள்ளியியல் துறை விரிவுரையாளர் சுபாஷ்சந்திரபோஸ் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior