உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

மக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அழிப்பு

திட்டக்குடி : 

                  ஆவினங்குடி மற்றும் சிறுபாக்கத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண் டுகளை தீயணைப்பு படையினர் அழித்தனர்.
 
                     ஆவினங்குடி தெற்குவீதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது தென்னந் தோப்பில் உள்ள 40 அடி உயர புளியமரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி, வயலுக்கு செல்வோரை கடித்து அச்சுறுத்தி வந்தது. தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி விஷ வண்டுகளை அழித்தனர். சிறுபாக்கம்: பாசார் கிராமத்தில் சுடுகாடு அருகில் உள்ள வேப்பமரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி அவ்வழியே செல்வோரை கடித்து அச்சுறுத்தி வந்தது. நேற்று முன்தினம் மாலை பச்சையம் மாள் (42), பிச்சன் (47), முருகன் (35), சடையன் (58), மாயவேல் (55) உட்பட பத்து பேர் விஷ வண்டு தாக்கி காயமடைந்தனர்.  இது குறித்து ஊராட்சி தலைவர் வரதராஜன் அளித்த தகவலின் பேரில் வேப்பூர் நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீப்பந்தம் கொண்டு விஷ வண்டுகளை அழித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior