உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

கோஷ்டி மோதல்: 5 பேர் கைது

 பண்ருட்டி: 

                   பண்ருட்டி அருகே கலப்பட பெட்ரோல் விற்றதை தட்டிக் கேட்ட தகராறில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (45). இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் இதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் கடையில் பெட்ரோல் வாங்கினார். பெட்ரோலில் கலப்படம் இருப்பதாக புகார் கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.இதன் காரணமாக நேற்று முன்தினம் சிவக்குமார் மற்றும் அவரது தம்பிகள் திருமலை, பழனி, தங்கை நவக்கொடி, மேனன், செல்வம் உள்ளிட்ட 11 பேர் ஆட்டோவில் சென்று ஆறுமுகம் வீட்டை தாக்கி ஆறுமுகம் அவரது மகன் சுந்தரபாண்டியன், சுதர்சன், மனைவி ரகுபதை ஆகியோரை தாக்கினர். இதில் ஆறுமுகம் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து திருமலை(37), பழனி (40), நவக்கொடி (32), செல்வம் (38), பாலு (28) ஆகியோரை கைது செய்து மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior