உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

வெளியூர் தேர்வர்கள் தங்ககடலூர் டவுன்ஹால் தயார்

கடலூர்: 

                  ராணுவ தேர்வில் பங் கேற்க வந்துள்ள வெளியூர் இளைஞர்களுக்கு இரவு தங்குவதற்கு கடலூர் டவுன்ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் வெளியூர்களிலிருந்து வந்துள்ள இளைஞர்கள் தங்குவதற்கு இடமின்றி இரவு நேரத்தில் மைதானத்தில் வெட்ட வெளியில் தங்கியுள்ளனர். இவர்கள் தங்குவதற்கு கடலூர் டவுன்ஹால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

இது குறித்து கலெக்டர் கூறுகையில் 

                   'கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் பணிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வெளியூரைச் சேர்ந்தவர்கள் இரவு தங்குவதற்கு கடலூர் டவுன்ஹால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இங்கு மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் டிபன் மற்றும் சாப்பிட்டிற்கான கடைகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior