உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

நெடுஞ்சாலை கையகப்படுத்தும் கல்லறைத் தோட்டத்துக்கு மாற்று இடம் வழங்கக் கோரிக்கை

கடலூர்:

               பெண்ணாடம் அருகே நெடுஞ்சாலை அமைக்க கையகப்படுத்தும் கல்லறைத் தோட்டத்துக்குப் பதில் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

பெண்ணாடத்தை அடுத்த பெ.பொன்னேரி புனித தோமையார் ஆலய பங்குத் தந்தை எல்.ஜோசப்ராஜ் மற்றும் அவ்வூர் மக்கள், திங்கள்கிழமை கடலூரில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அளித்த கோரிக்கை மனு: 

                 விருத்தாசலம் - தொழுதூர் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக பெண்ணாடம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் பொன்னேரி ரயில்வே கேட் அருகில் உள்ள கல்லறைத் தோட்ட நிலம் கையகப்படுத்தப்படுகிறது. கடந்த 100 ஆண்டுகளாக இப்பகுதி கிறிஸ்தவ மக்களால் இந்தக் கல்லறைத் தோட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்னோர்களுக்கு வழிபாடும் இங்கு செய்யப்படுகிறது.கல்லறைத் தோட்டம் அகற்றப்படும் நிலையில் இங்குள்ள கிறிஸ்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். அருகில் உள்ள இடுகாட்டு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, கல்லறைத் தோட்டத்துக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior