உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது : முன்னாள் அமைச்சர் சம்பத் குற்றச்சாட்டு


பண்ருட்டி: 

                 சுகாதார துறை அமைச் சராக இருந்தும் கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவர முடிய வில்லை என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத் பேசினார்.

               தி.மு.க., அரசின் மக் கள் விரோத போக்கு மற் றும் மின்தடையை கண் டித்து அ.தி.மு.க., சார்பில் புதுப்பேட்டையில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. நகர செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். அண்ணாகிராம ஒன்றிய செயலாளர் விபீஷணன், ஒன்றிய துணை சேர்மன் சம்மந்தம், பேரவை செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச் சாளர்கள் அன்பழகன், கங்கா, ஒன்றிய சேர்மன் கவுரிபாண்டியன், மாவட்ட துணை செயலாளர் முருகமணி, நகர இளைஞரணி செயலாளர் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சம்பத் பேசியதாவது:

                  தி.மு.க.அரசு காவேரி, பாலாறு பிரச்னையை தீர்க்க எந்தவித நடவடிக் கையும் எடுக்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் மழைநீர் சேகரிப்பு திட்டம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியின் போது மலட்டாறு தூர் வாருவதற்கு 96 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்தது. நெல்லிக்குப்பம் தொகுதியில் 7 உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளிகளாக மாற்றினேன். புதுப்பேட்டை பள்ளிக்கு 60 லட்ச ம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறை, பெண்கள் பள்ளி துவக்கப்பட்டது. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சுகாதார துறை அமைச்சராக இருந் தும் கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவர முடியவில்லை. தற் போது விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. மக்கள் விரோத அரசாகவே தி.மு.க., செயல்படுகிறது. இவ்வாறு மாவட்ட செயலாளர் சம்பத் பேசினார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior