உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

சிதம்பரம் அருகே சாலை மறியல் வி.சி.,யினர் மீது போலீஸ் தடியடி

 பரங்கிப்பேட்டை: 

                        புதுச்சத்திரம் அருகே டிஜிட்டல் பேனரை கிழித் தவர்களை கைது செய்ய கோரி கடலூர் - சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி விருது வழங்கும் விழா மற்றும் அம்பேத்கர் பிறந்த நாள் குறித்து, சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் சிலம்பிமங்கலத்தில் அக்கட்சியினர் டிஜிட்டல் பேனர் வைத்திருந்தனர். அந்த பேனரில் ஒரு பகுதி கிழிந்திருந்தது. பேனரை கிழித்தவர்களை கைது செய்யக் கோரி கடலூர் - சிதம்பரம் சாலையில் சிலம்பிமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே வி.சி.,யினர் மறியலில் ஈடுபட்டனர். சிலம்பிமங்கலம், பெரியப்பட்டு, தச்சம் பாளையம், பெரியாண்டிக் குழி, பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தகவலறிந்த எஸ்.பி., அதிரடிப்படை போலீசாருடன் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். மறியலை கைவிட மறுத்தனர். இந்நிலையில் அவ்வழியே சிதம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் மற்றும் லாரியின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். கல்வீச்சு சம்பவத்தில் லாரி டிரைவர் சரவணன் காயமடைந்தார்.இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மறியல் செய்தவர்கள் சிதறி ஓடினர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மறியலால் கடலூர் - சிதம்பரம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior