உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

சாலை அகலப்படுத்தும் பணி நிறுத்தம் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

 விருத்தாசலம்: 

                விருத்தாசலத்தில் முக்கிய சந்திப்புகளில் நடந்த சாலை அகலப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெறாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். விருத்தாசலத்தில் பாலக்கரை மற்றும் கடைவீதி போக்குவரத்தின் முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் இடப்பற்றாகுறை காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க இப்பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை அகலப்படுத்த முடிவு செய்து கடந்த 15 தினங்களுக்கு முன் முதல் கட்ட பணியை துவங்கினர். முதல் ஐந்து நாட்கள் மட்டுமே பணி மும்முரமாக நடந்தது. பாலக்கரை மற்றும் கடைவீதியில் சாலை ஓரம் பள்ளம் தோண்டப்பட்டு செம்மண் கொட்டி சமப்படுத்தியதுடன் நிறுத்தி விட்டனர். தொடர்ந்து பணி நடைபெறாததால் தற்போது சாலை ஓரங்களில் ஒரு அடி அளவிற்கு பள்ளமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், பொதுமக்களும் ஒதுங்கிச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளதால் சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior