உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

குடிநீர் குழாய் உடைப்பு கடலூருக்கு குடிநீர் தட்டுப்பாடு

கடலூர்: 

                    திருவந்திபுரம் அருகே குடிநீர் குழாய் சேதமடைந்ததால் கடலூருக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி உள்ளது. இதற்கு எட்டு போர்வெல் மூலம் தண் ணீர் ஏற்றப்படுகிறது. இங்கிருந்து குழாய் மூலம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம், கே.கே.நகர், அண்ணா நகர் மற்றும் பத்மாவதி நகர், போலீஸ் குடியிருப்பு, தேவனாம்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள எட்டு மேல் நிலை நீர்தேக் கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது. இந்நிலையில் கடலூர் அடுத்த கே.என்.பேட்டையில் கழிவு நீர் குழாய் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவந்திபுரத்திலிருந்து வரும் குடிநீர் குழாய் சேதமடைந்தது. இதனால் நேற்று காலை 9 மணியிலிருந்து குடிநீர் வெளியேறியது. தகவலறிந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பராமரிப்பாளர்கள் பகல் 2 மணி முதல் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி குடிநீர் குழாயை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த குடிநீர் குழாய் உடைப்பால் கடலூருக்கு முழு அளவு தண்ணீர் கிடைப்பது இரண்டு நாட்களாகும் என தெரிகிறது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior