உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

பொலிவிழந்த முதுநகர் காந்தி பூங்கா

 கடலூர்: 

                       கடலூர் முதுநகர் காந்திப் பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல் பொலிவிழந்து காணப்படுகிறது. கடலூர் முதுநகர் மணிகூண்டு எதிரில் பழமையான காந்திப் பூங்கா உள் ளது. இப்பூங்கா கடந்த 2005ம் ஆண்டு பொது நிதி மூலம் 11.5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. பூங்காவிற்கு மாலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் முதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து பொழுதை கழித்துச் செல்வார்கள்.
 
                   தற்போது இந்த பூங்கா போதிய பராமரிப்பின்றி அங்கு அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலை முற்றிலும் பொலிவிழந்துள்ளது. மின் விளக்குகள் முற்றிலும் எரியாததால் இரவு நேரங்களில் பூங்கா முழுவதும் இருளில் மூழ்கிவிடுகிறது. ஊஞ்சல், சறுக்கு மரம், ராட்டிணம் உள் ளிட்ட குழந்தைகள் விளையாட்டு சாதனங்களும் முற்றிலும் பழுதடைந்துள்ளன. நீரூற்றும் இயங்காததால் அழகிற்காக வைக்கப்பட்டிருந்த புல் தரைகளும் காய்ந்துள்ளது. கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில் பூங்காவிற்கு மாலை நேரங்களில் பெற்றோருடன் வரும் மாணவ, மாணவிகள் பொலிவிழந்து காணப்படும் காந்தி பூங்காவை கண்டு மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகம் பூங் காவை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior