உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

டெண்டர் எடுப்பதில் தகராறு

 கடலூர்: 

                            கழிவறையை டெண்டர் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். கடலூர் அடுத்த வழிசோதனைப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் சந்திரகாசு, துரைரங்கம், சண்முகவேல். இவர்கள் மூவரும் கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிவறையை கடந்த இரண்டு ஆண்டுகளாக டெண்டர் எடுத்து நடத்தி வந்தனர். கடந்த 31ம் தேதியுடன் டெண்டர் முடிந்தது. இந்நிலையில் சந்திரகாசு, துரைரங்கம் ஆகியோர் சேர்ந்து தற்போது டெண்டர் எடுக்க முயற்சி செய்தனர். இதனை சண்முகவேல் தட்டிக்கேட்டார். இதனால் சந்திரகாசு, துரைரங்கம் இருவரும் சேர்ந்து சண்முகவேலை தாக்கினர். இருதரப்பினர் புகாரின் பேரில் திருப்பாதிரிபுலியூர் போலீசார் சந்திரகாசு, துரைரங்கம், சண்முகவேல் ஆகிய மூவர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior