உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 31, 2010

ரயில்வே சுரங்கப்பாதை பணி: இளைஞர் காங். வலியுறுத்தல்

கடலூர்: 

                     கல்வி கட்டண குறைப்பை அனைத்து பள் ளகளிலும் அமல்படுத்திட இளைஞர் காங்.,கோரிக்கை விடுத்துள்ளது. கடலூர் லோக்சபா தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் கடலூர் காங்., அலுவலகத்தில் நடந்தது. கூட்டத் திற்கு கடலூர் லோக்சபா தொகுதி இளைஞர் காங்., தலைவர் வனிதா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரமேஷ், சட்டசபை தொகுதி செயலாளர் குறிஞ்சிப்பாடி அழகிரி, விருத்தாசலம் இளையராஜா, திட்டக்குடி சவுந்தர், கடலூர் ராமராஜ், பண்ருட்டி லிஸ்ஸி ஜோஸ்பர் சபரிநாதன்,நெய்வேலி கலியபெருமாள் மற்றும் லோக்சபா தொகுதி பொது செயலளர்கள் தமிழ்செல்வன், ராமநாதன், வேல்முருகன் பங்கேற்றனர். கூட்டத்தில் மாவட்டத்தில் வெள்ள கால தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசிடமிருந்து 300 கேடி ரூபாய் பெற்று தந்த எம்.பி., அழகிரிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கட்டணம் குறைப்பை அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தவும், இதனை கண்காணிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
            தொழிலாளர் பிரச் னைக்கு என்.எல்.சி., நிர் வாகம் உடன் தீர்வு காண வேண்டும். என்.எல். சி.,க்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு நிர் வாகம் நிரந்தர வேலை கொடுக்க வேண்டும். கடலூரில் ராஜிவ் காந்தி சிலை வைக்க நகர நிர்வாகம் ஆவன செய்ய வேண் டும். கடலூர் ரயில்வே சுரங்கப்பாதை பணியை உடன் துவங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டக்குடியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். வெலிங்டன் ஏரிக்கரை பலப்படுத்தும் பணியை பருவ மழை தொடங்கும் முன் விரைந்து முடிக்க வேண் டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior