உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 31, 2010

இலவச நாடி மருத்துவ முகாம்

புவனகிரி: 

                     புவனகிரியில் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் சார்பில் இலவச நாடி மருத்துவ முகாம் நடந்தது. புவனகிரியில் இறைவழி மருத்துவ ஆராய்ச்சி அருட்பெருஞ்ஜோதி மருத்துவ மையம் மற்றும் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் இணைந்து முதல் முறையாக இலவச நாடி மருத்துவ முகாம் நடந் தது. புவனகிரியை சுற்றியுள்ள பெருமாத்தூர், பூதவராயன்பேட்டை, அழிச்சிக்குடி, உடையூர், கீரப்பாளையம், வடஹரிராஜபுரம், தெற்கு திட்டை, வடக்கு திட்டை, சாத்தப்பாடி, தம்பிக்கு நல்லான்பட்டினம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 250 பேர் முகாமில் பங்கேற்றனர். அவர்களுக்கு இறைவழி மருத்துவர் குமார் தலைமையில் நாடி பரிசோதனை மூலம் உடல் உள்ளுருப்புகளில் ஏற்பட்டுள்ள நோய்களை கண்டறிந்தும், இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக்க ஆலோசனைகளும் வழங்கப் பட்டது. புவனகிரி ஆதிபராசக்தி வழிபாடு மன்ற காப்பாளர் சுப்ரமணியன், மன்ற தலைவர் சஞ்சீவராயர் உள்ளிட்டவர்கள் பயனாளிகளுக்கு மோர், பிஸ்கெட் வழங்கினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior