உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 31, 2010

என்எல்சி தொமுச இன்று ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்குகிறது

நெய்வேலி:

               ஊதியமாற்று ஒப்பந்தத்தில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி என்எல்சி நிர்வாகத்திடம் திங்கள்கிழமை ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கவிருப்பதாக தொமுச அலுவலகச் செயலர் எ.காத்தவராயன் தெரிவித்தார். 

                என்எல்சி தொழிலாளர்களின் ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் பாமக கடந்த 3 மாதங்களாக நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி வருகிறது. இதில் பெரும்பாலான கொள்கை முடிவுகள் பேசிமுடிக்கப்பட்டுள்ள நிலையில் அலவன்ஸ் நிலுவைத் தொகை பெறுவதில் முட்டுக்கட்டை நிலவியது. இதையடுத்து தொமுச நிர்வாகிகள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தொமுச பேரவை நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்தனர். இந்நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்ற தொழிலாளர்களை ஒன்றிணைத்து போராட்ட நடவடிக்கையில் இறங்க முடிவு செய்திருப்பதாகவும், இதில் முதற்கட்டமாக திங்கள்கிழமை, நிர்வாகத்திடம் வேலைநிறுத்த அறிவிப்புக் கடிதம் வழங்கப்படும் என்று  எ.காத்தவராயன் தெரிவித்தார். பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள மற்றொரு சங்கமான பாமக தொழிற்சங்கம் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior