உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 31, 2010

பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை கழிவுநீர் வெளியேறுவதால் துர்நாற்றம்

பரங்கிப்பேட்டை: 

             பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பழைய மருத்துவமனையில் முதல் மாடியில் உள்நோயாளிகள் சிகிச்சை பெரும் வார்டுகளில் கழிவுநீர் குழாய் மூலம் கீழே உள்ள செப்டிக் டேங்கிற்கு செல்ல வேண்டும். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் மாடியில் இருந்து குழாய் வழியாக வரும் கழிவுநீர் உடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை பின்புறம் உள்ள நெல்லுக்கடை தெரு வழியாக கழிவுநீர் வழிந்து சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுவதை தடுக்க சமமந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior