உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 31, 2010

நெய்வேலி சுரங்கத்தில் வெளியேறும் தண்ணீரைஅரியகோஷ்டி வாய்க்காலுக்கு திருப்ப கோரிக்கை

பரங்கிப்பேட்டை

               நெய்வேலி சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை அரியகோஷ்டி வாய்க்காலுக்கு திருப்பிவிட கலெக்டருக்கு ஊராட்சி தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து பரங்கிப்பேட்டை ஒன்றியம், அரியகோஷ்டி ஊராட்சி தலைவர் கஸ்தூரி ராஜேந்திரன் அனுப்பியுள்ள மனு:
 
                     நெய்வேலியில் விஸ்தரிப்பு செய்யப்படும் பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெறியேற் றப்படும் தண்ணீரை கம் மாபுரம், சாத்தப்பாடி வழியாக அரியகோஷ்டி கடைமடை வாய்க்கால் மூலம் விவசாய பாசனத்திற்கு திருப்பி அனுப்ப வேண் டும். அப்படி செய்தால் புவனகிரி, தம்பிக்குநல் லாண்பட்டினம், ஆதிவராகநல்லூர், மஞ்சக்குழி, தீர்த் தாம்பாளையம், பு.முட்லூர், சின்னகுமட்டி, சம்பந்தம், ஆணையாங்குப்பம், அரியகோஷ்டி உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள்.

                தற்போது வீராணம் ஏரி பாசனத்தை நம்பி ஒரு போகம் மட்டுமே பயிரிடப்படுகிறது. மழைக்காலங்களில் நெல் பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி சேதமடைகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே வீணாக செல்லும் நெய்வேலி சுரங்க தண்ணீரை அரியகோஷ்டி வாய்க்கால் பகுதி விவசாயிகள் பயன்படுத்தினால் அந்த பகுதியில் உள்ள சிறு, குறு விவசாயிகளும், ஏழை விவசாய கூலி தொழிலாளர்களும் வறுமையில்லாமல் வாழ்வார்கள். அதனால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior