உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 31, 2010

பாலமான் வாய்க்கால் ஆக்கிரமிப்பு மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் கோரிக்கை

சிதம்பரம்: 

              சிதம்பரம் அருகே பாலமான் வாய்க்காலை ஆக்கிரமித்து குடியிருப்பு கட்டுவதை தடுக்க அரசுக்கு மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மறுமலர்ச்சி வன்னியர் சங்கத்தின் நிறுவன தலைவர் மணிவண்ணன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: 

                   சிதம்பரம் அடுத்த உசுப்பூர் சாரதாராம் நகரில் தனி நபர் பாலமான் வாய்க்காலை ஆக்கிரமித்து, அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகிறார். இதனால் மழைக் காலங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி பாதிப்பு ஏற் படும் அபாயம் உள்ளது.எனவே சம்மந்தப் பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றிட உரிய நடவடிக்கை எடுப்பதுடன், சாக்கடை மற்றும் செப்டிக்டேங்க் கழிவு நீரும் இந்த வாய்க்காலில் கலக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மர்ம நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் நலன் கருதி சாக் கடை நீர் பாலமான் வாய்க்காலில் கலப்பதையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior