உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 31, 2010

கல்வியியல்மாணவர்களுக்கு தேர்வு

விருத்தாசலம்:

                  விருத்தாசலம் அரசு கல்லூரியில், கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு அரசுத் தேர்வு வியாழக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில், கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு மே 27-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வு ஜூன் 9-ம் தேதி தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வில் விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் உள்ள 17 கல்லூரிகளைச் சேர்ந்த 1700 மாணவர்கள் பி.எட் தேர்வும், 98 மாணவர்கள் எம்.எட். தேர்வும் எழுதுகின்றனர். தேர்வுகளை பேராசிரியர்கள் பக்கிரிசாமி, மனோகரன், சுப்பிரமணியன், கதிர்வேல் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior