உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 31, 2010

காமராஜர் பல்கலை. தொலைநிலைக் கல்வி மாணவர்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு

மதுரை

                மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்கக மாணவர்களுக்கான திறந்தவெளி தொடக்கநிலை மற்றும் அடிப்படை நிலை, சான்றிதழ், பட்டயம், முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான ஏப்ரல் 2010-ம் ஆண்டுக்கான அல்பருவத் தேர்வுகள் ஜூலை 3-ம் தேதி தொடங்க உள்ளன.  

      இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்:  அபராதமின்றி - 1.6.2010, ரூ.100 அபராதத் தொகையுடன்- 10.6.2010. 

                      சான்றிதழ், பட்டயம், முதுநிலைப் பட்டயம், திறந்தவெளி- தொடக்கநிலை மற்றும் அடிப்படை நிலை படிப்புகள் ஆகியவற்றுக்கான தேர்வுகள் ஜூலை 7-ம் தேதி தொடங்கி ஜூலை 31-ம் தேதி வரை (ஓவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்) நடைபெறும்.  தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தால் அனுப்பப்பட்டு வருகின்றன.        

              தனித்தேர்வர்கள் தேர்வு விண்ணப்பங்களைக் கூடுதல் தேர்வாணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.  அஞ்சல் மூலம் பெற விரும்புவோர் ரூ.15-க்கான அஞ்சல் தலை ஒட்டிய சுய முகவரியிட்ட உறையை இணைத்துக் கூடுதல் தேர்வாணையர் முகவரிக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.  இத் தகவல்களை பல்கலைக்கழக கூடுதல் தேர்வாணையர் (பொறுப்பு) கு.சேதுராமன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior