உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

கடலூர், சிதம்பரத்தில் 91 மையங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

கடலூர் :

             கடலூர், சிதம்பரம் நகராட்சி பகுதிகளில் நாளை 91 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இது குறித்து நகராட்சி கமிஷனர்கள் கடலூர் குமார், சிதம்பரம் ஜான்சன் விடுத்துள்ள செய்திக் குறிப்புகள்: 

              போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (10ம் தேதி)யும், வரும் பிப்.7ம் தேதி என இரு கட்டமாக நடக்கிறது. இதற்காக கடலூர் நகராட்சி பகுதியில் 68 மையங்களும், சிதம்பரம் நகராட்சி பகுதியில் 23 மையங்களும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

                 இப்பணியில் நகராட்சி பொது சுகாதாரம், குடும்ப நலத்துறை, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலத் திட்டப் பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள், சத்துணவு திட்ட பணியாளர்கள் உட் பட 400 பேர் ஈடுபடுகின் றனர். நரிக்குறவர்கள் மற் றும் நகராட்சி பகுதியில் தங்கியிருப்பவர்களை கண்டறிந்து சொட்டு மருந்து வழங்க தனிக் குழுக்கள் அமைக்கப் பட் டுள்ளன. பொது மக்கள் ஐந்து வயது குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டு பயனடையவும் என செய்திக்குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior