உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

குடிசைப் பகுதி மக்கள் திடீர் சாலை மறியல்

நெய்வேலி: 

                நெய்வேலியில் வட்டம் 21 குடிசைப் பகுதி மக்கள் கடை வீதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெய்வேலி வட்டம் 21 பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முறைப்படி விண்ணப்பித்தவர்களுக்கு நகர நிர்வாகம் மின் இணைப்பு வழங்கியுள்ளது. சிலர் தங்களது குடிசைப் பகுதிக்கு மேலே செல்லும் மின்கம்பிகளில் நகர நிர்வாகத்தின் அனுமதியின்றி சட்டத்துக்கு புறம்பான வகையில் மின் திருட்டில் ஈடுபட்டதாகவும், இதனால் மின்னழுத்தம் ஏற்பட்டு, அங்கிருந்த மின்மாற்றியில் பழுது ஏற்பட்டு மின்துண்டிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

                     இதனால் அப்பகுதி முழுவதும் வியாழக்கிழமை மின் விநியோகம் தடைபட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு மின்துண்டிப்பை சரிசெய்து மின்சாரம் வழங்க வேண்டும் என்றும், அடிப்படை வசதிகளை செய்துத்தர வேண்டும் என்று வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை அதிகாலை அப்பகுதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து என்எல்சி நகர நிர்வாக அதிகாரி சம்பவ இடத்துக்குச் சென்று, அப்பகுதி மக்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டதையடுத்து, அப்பகுதி மக்கள்  கலைந்து சென்றனர். இதை அடுத்து மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்து சகஜ நிலையை அடைந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior