உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

கடலூர் பகுதியில் பைக் திருடிய புதுச்சேரி வாலிபர்கள் இருவர் கைது

கடலூர் :

                   கடலூரில் பல இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடிய புதுச்சேரி வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். மூன்று மோட்டார் சைக்கிள்கள் கைப்பற் றப்பட்டுள்ளன. கடலூர் புதுநகர் குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் லியாகத் அலி,ஏட்டுகள் தேசிங்குராஜன், முருகன், சண்முகம், அமானுல்லா, ஞானமூர்த்தி உள்ளிட்டோர் நேற்று விடியற்காலை கடலூர் ஆல்பேட்டை செக்போஸ்ட் அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது கடலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து விசா ரித்தனர்.

               அதில் அவர்கள் புதுச்சேரி முத்த ரையர்பாளையம் கோவிந்தன் கோவில் தெரு மாயகிருஷ்ணன் மகன் சரவணன் (23), அரியாங்குப்பம் டோல் கேட் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ரமேஷ் என்கிற சக்திவேல் (31) என்பதும், அவர் கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கடலூர் எல்.ஐ.சி., அலுவலக வளாகத் தில் திருடியதும், அதேபோன்று கலெக் டர் அலுவலகம் மற்றும் மஞ்சக்குப்பம் மார்க் கெட் பகுதிகளில் தலா ஒரு மோட்டார் சைக்கிள் களை திருடியது தெரிய வந்தது. அதன்பேரில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும், ஏற்கனவே திருடி விற்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவர் மீதும் வழக்கு பதிந்து நேற்று மாலை கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior