உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

பூலோகநாதர் கோவிலில் சிவ விஷ்ணு பஜனை

நெல்லிக்குப்பம் :

              நெல்லிக்குப்பத்தில் இன்று தனூர் மாத சிவ விஷ்ணு பஜனை ஊர்வலம் நடக்கிறது.நெல்லிக்குப்பத்தில் பழமையான பூலோகநாதர் கோவில் உள்ளது. இங்கு வெங்கடாஜலபதி சன்னதியும் உள்ளது. ஒரே இடத் தில் நின்றபடி சிவனையும், பெருமாளையும் தரிசிக்க முடிவது சிறப்பாகும். அனைத்து கோவில்களிலும் சிவன், விஷ்ணு பஜனைகள் தனித்தனியாக நடக்கும். இக்கோவிலில் மட்டும் தனூர் மாதத்தில் சிவன், விஷ்ணு பஜனை ஊர்வலம் ஒன்றாக நடக் கும். இன்று 9ம் தேதி காலை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு சிவ விஷ்ணு பஜனை ஊர்வலம் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியே செல்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior