உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் பிரசவம்

நெல்லிக்குப்பம் :

                 மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியின் நிறைமாத கர்ப்பிணிக்கு ஆம்புலன்சிலேயே ஆண் குழந்தை பிறந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூரை சேர்ந்த முருகன் மனைவி ஆதிலட்சுமி (30). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவ வலியால் துடித்தார். அவரை 108 ஆம்புலன்சில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, காராமணிக்குப் பம் அருகே ஆதிலட்சுமிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் ஆம்புலன்ஸ் சாலையோரம் நிறுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் பைலட் துரைராஜ், மருத் துவ உதவியாளர் அமலா ஆகியோர் ஆதிலட்சுமிக்கு பிரசவம் பார்த்தனர். சற்று நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாய் மற்றும் சேயை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நெல்லிக்குப்பத்தில் உள்ள 108 ஆம்புலன்சில் இதுவரை 10 பெண்களுக்கு பிரசவம் நடந்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior