உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நூலக விழிப்புணர்வு போட்டி

 கடலூர் :

                  மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, சுலோகம் எழுதும் போட்டிகள் நடந்தது. நூலகம் பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட மாவட்ட நூலகத்துறை சார்பில் கட்டுரை, பேச்சு, சுலோகம் எழுதும் போட் டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடலூர் மஞ்சக்குப் பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான போட்டி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.

                 நூலக அலுவலர் அசோகன் முன்னிலை வகித்தார். பச்சையப்பன் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் போட்டியை துவக்கி வைத்தார். இதில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 42 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறும் மாணவர்கள் கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வரும் 22ம் தேதி நடக்கும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். போட்டி ஏற்பாடுகளை தமிழாசிரியர் கருணாநிதி செய்திருந்தார். அலுவலக கண்காணிப்பாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior