உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

குடும்பம் நடத்த மனைவி மறுப்பு: விரக்தியில் கணவர் தற்கொலை

பண்ருட்டி :

               குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார். பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பம் திடீர்குப்பத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(26). இவரது மனைவி சல்வி(20). இவர்களுக்கு திருமணமாகி 7 மாதமாகிறது. கர்ப்பமாக இருந்த செல்விக்கு கடந்த மாதம் அபார்ஷன் ஆனது. அதன் பிறகு செல்வி மேலிருப் பில் உள்ள தனது தாய் வீட் டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் பாலமுருகன் மேலிருப்பு கிராமத்திற்கு சென்று செல்வியை வீட்டிற்கு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். விரக்தியடைந்த பாலமுருகன் காட்டாண்டிக்குப்பத் தில் சேதுபதி என்பவரின் தோப்பில் உள்ள பலா மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior