உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

பைக் மோதி விபத்து: மாணவர் பலி

பரங்கிப்பேட்டை :

            மாட்டு வண்டி மீது பைக் மோதியதில் மாணவர் இறந்தார். பரங்கிப்பேட்டை ரெங்கப்பிள்ளை மண்டபத்தெருவை சேர்ந்தவர் சையது முகம்மது மகன் ஜான் பாஷா (17), அதேப்பகுதி அப்துல் ரசாக் மகன் பாரூக்பாஷா(19). இருவரும் பரங்கிப் பேட்டை அரசு பள்ளியில் படித்து வந்தனர். நேற்று முன்தினம் இருவரும் பைக்கில் பரங்கிப் பேட்டையில் இருந்து முட்லூருக்கு சென்றனர். ஜான் பாஷா பைக்கை ஓட்டினார். ரயிலடி அருகே சென்றபோது முன்னால் சென்ற மாட்டு வண்டி மீது பைக் மோதியது. தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஜான்பாஷா மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior