உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

பஸ்ûஸ மறித்து கொள்ளையிட திட்டமிட்ட 3 பேர் கைது

சிதம்பரம்: 

                  சிதம்பரம் அருகே பஸ்ûஸ மறித்து கொள்ளை முயற்சியில் ஈடுபட திட்டமிட்டு நின்றிருந்த 3 பேரை போலீஸôர் கைது செய்தனர். மேலும் தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.

                  சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கே.அம்பேத்கர், குமரேசன் மற்றும் போலீஸôர் வியாழக்கிழமை இரவு சிதம்பரத்தை அடுத்த உசுப்பூர் ரயில்வேகேட் அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு உருட்டுக் கட்டைகளுடன் நின்றிருந்த பூதவராயன்பேட்டை பழனியப்பன் (27), செந்தில்குமார் (28), கிள்ளையைச் சேர்ந்த கர்ணன் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்தனர். மேலும் தப்பிஓடிய அண்ணாமலைநகரைச் சேர்ந்த சுவாமிநாதன், சுரேந்திரன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். மேற்கண்ட கும்பல் அவ்வழியே வரும் பஸ் மற்றும் லாரியை வழிமறித்து கொள்ளையடிக்க திட்டமிட்டு நின்றிருந்தது போலீஸôர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior