உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு ரத ஊர்வலம்

கடலூர் :

           போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு ரத ஊர்வலத்தை கலெக்டர் துவக்கி வைத்தார். கடலூர் மாவட்டத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக் கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நாளை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத்துறையினர் செய்து வருகின்றனர். அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கிட பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட ரத ஊர்வலத்தை கலெக்டர் சீத்தாராமன் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் மீரா பங்கேற்றனர். டி.ஆர்.ஓ.. நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த ரதம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior