உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

உழவர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

புவனகிரி :

                    மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து உழவர் முன்னணி சார்பில் கீரப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட நிஷா புயல், வெள்ளத்தில் புவனகிரி அடுத்த ஒரத்தூர் பகுதி விவசாய பயிர்கள் சேதமடைந்தன. இதற்கு மத்திய அரசின் காப்பீடு தொகை முழுமையாக பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால் அதன்படி இழப்பீட்டு தொகை வழங்கவில்லை.

                 இதனைக் கண்டித்து தமிழக உழவர் முன்னணி சார்பில் நேற்று கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஆலோசகர் வெங்கட்ராமன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். பின்னர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். முன்னதாக புவனகிரி பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior