உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

நெய்வேலி :

              ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். வடக்குத்து ஊராட்சி தலைவர் இன்ஜினியர் அன்புமணி (38). இவரை சில தினங்களாக தொலைபேசியில் மர்ம நபர் மிரட்டி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அன்புமணி அலுவலகம் முன்பாக நிறுத்தி வைத்திருந்த அவரது கார் மர்ம நபர்களால் அடித்து சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து அன்புமணி கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவந்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில் திராவிடன் (28) என்பவரை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior