உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

பச்சையாங்குப்பம் - துறைமுகம் சாலை குண்டும் குழியுமாக மாறிய அவலம்

கடலூர் :

                கடலூர் துறைமுகத் திற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக் கற்ற நிலையில் உள்ளது.கடலூர் துறைமுகம் பல ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு முதல் சரக்குகள் கையாளப்பட்டு வருகிறது. இதனால் துறைமுகத்தில் 14 கோடி ரூபாய் செலவில் சிமென்ட் சாலை, சுற்று சுவர் மற்றும் ஹைமாஸ் விளக்கு அமைத்து மேம்படுத்தப் பட்டது. ஆனால் துறைமுகச்சாலை என அழைக் கப்படும் பச்சையாங் குப்பம்-துறைமுகம் சாலை பல ஆண்டாக பராமரிப்பின்றி உள்ளதால் குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக் கற்ற நிலையில் உள்ளது. இரவில் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சற்றுகவனக்குறைவு ஏற்பட்டாலும் பள்ளத்தில் விழ வேண்டியுள்ளது. கடந்த மாதம் பெய்த மழையினால் சாலை மிகவும் மோசமானது.

                இதனால் சாலையின் பல இடங்களில் பெரிய பள்ளம் ஏற்பட்டு குட்டை போல் காட்சியளிக்கிறது. தற்போது மீன் பிடி துறைமுகத்தை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் இருப்பதால் இந்த சாலையை துறைமுக பொறுப்பில் இருந்து தற்போது நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நகராட்சியாவது இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior